சென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தத் திடீர் மழை, மொத்தம் 27 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட காரணமாக அமைந்தது.
	 
	இதேபோல், சென்னைக்கு வந்த மேலும் 8 விமானங்கள், வானில் நீண்ட நேரம் வட்டமடித்த பின்னரே தரையிறங்க அனுமதிக்கப்பட்டன. இதனால், அந்த விமானங்களில் பயணித்த பயணிகள் பெரும் தாமதத்தை சந்தித்தனர்.