இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு பகுதிகளிலும், நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட பகுதிகளிலும் கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.