தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

வியாழன், 8 டிசம்பர் 2022 (15:15 IST)
சென்னையில் இருந்து 620 கிமீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால்  தமிழகத்தில் நாளை முதல் 3  நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது.

எனவே நாளை நள்ளிரவில் புதுச்சேரி – ஸ்ரீகரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.

ALSO READ: அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களுக்கு மழை: வானிலை எச்சரிக்கை
 
இதனால், தமிழகக் கடற்கரை பகுதிகளில் 75கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்; தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் டெல்டா பகுதியில் இன்றூ மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

 
Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்