தமிழகம் முழுவதும் கனமழை: வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி!

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (07:56 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. 
 
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி உள்ளது என்பதும் அதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் திடீரென மீண்டும் கனமழை பெய்ததை அடுத்து பல இடங்களில் வெள்ளக்காடாக இருப்பதால் பொதுமக்கள் அவதி உள்ளனர். குறிப்பாக கோவை விராலிமலை புதுக்கோட்டை திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது அடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்