தேர்தல் வருவதால் கொரோனா பாதிப்பு குறைத்து காண்பிக்கப்படுகிறதா?

திங்கள், 31 ஜனவரி 2022 (19:06 IST)
தேர்தல் வருவதற்காக கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து காட்டப்படுகிறதா? என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பதில் அளித்துள்ளார் 
 
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பிரிவு ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆன்லைனில் கல்வி கற்பதால் கற்கும் திறன் பாதிப்பதாக கல்வி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தான்  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார் 
 
மேலும் உள்ளாட்சி தேர்தல் வருவதால் தான் தொற்று பாதிப்பு குறைத்து  காட்டப்படுவதாக சமூகவலைதளங்களில் கூறப்படும் தகவல் பொய்யானது என்றும் கடந்த 15ஆம் தேதிக்கு பின்னர் உண்மையிலேயே கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் 26 மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்