நாங்கள் ஆட்சிக்கு வந்தால், காவல்துறையின் யூனிபார்மை காவியாக மாற்றுவோம்: எச்.ராஜா

செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (11:18 IST)
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் யூனிபார்மை காவியாக மாற்றுவோம் என பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சேகர் பாபு பதவி விலக வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தின்போது எச் ராஜா செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார். திராவிட ஆட்சியை ஒழித்து பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் நாள் நிச்சயம் தமிழகத்திற்கு வரும் என்று தெரிவித்தார். 
 
பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறைக்கு காவி யூனிபார்மை மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது உள்ள காக்கி யூனிபார்ம் என்பது தமிழக அரசு நியமனம் செய்ததுதான். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் காக்கி யூனிபார்மை காவி யூனிபார்ம் ஆக மாற்றுவோம் என்று தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்