பொங்கல் பண்டிகைக்கு ரயில் முன்பதிவு: இன்று முதல் தொடக்கம்!

திங்கள், 12 செப்டம்பர் 2022 (07:30 IST)
பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று முதல் செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே ரயிலில் முன்பதிவு செய்து கொள்வது வழக்கம்
 
அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது 
 
ரயில்நிலைய கவுன்ட்டர்களில் இன்று காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதேபோல ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்