ரயில் மோதி உயிர்பிழைத்த மனிதன்..வைரலாகும் வீடியோ

புதன், 7 செப்டம்பர் 2022 (21:35 IST)
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ரயில் மோதி உயிர்பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வட மா நிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ரயில் வரும்போது, வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாய் ரயிலில் அடிபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த  நிலையில், இன்று, உத்தர்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் அடியில் சிக்கினார் ஒருவர். ஆனால், அதிர்ஷ்டஸ்மாக அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற ஆபத்தான சம்பவங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என  நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்