மதுராந்தகம் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

சனி, 23 பிப்ரவரி 2019 (07:41 IST)
இன்று திண்டிவனம் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் மரணம் அடைந்த நிலையில் இன்னொரு சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து கார் ஒன்றின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
 
இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான 4 பேர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்