சிறுவனுக்கு புற்றுநோய்; விஷ ஊசி போட்ட தந்தை! – சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:33 IST)
சேலத்தில் மகனுக்கு புற்றுநோய் இருந்ததால் தந்தையே விஷ ஊசி போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கட்சுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு வண்ணத்தமிழ் என்ற 14 வயது மகன் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வண்ணத்தமிழுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து மருத்துவ ஊழியர் இருவரின் உதவியோடு தனது மகனுக்கு விஷ ஊசியை செலுத்தி கொன்றுள்ளார் பெரியசாமி. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெரியசாமி மற்றும் அவருக்கு உதவிய இரண்டு மருத்துவ ஊழியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்