ராயல் என்பீல்ட் பைக் ஒன்று தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு

புதன், 8 ஜூன் 2022 (16:10 IST)
சென்னையில் இன்று ராயல் என்பீல்ட் பைக் ஒன்று தீப் பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று காலை, வள்ளுவர் கோட்டம் சாலையில் ஒரு இளைஞர் தனது ராயல் என்பீல்ட் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவரது இருசக்கர வாகனத்தில் புகை வந்ததால்  அவர் வாகனத்தை விட்டு கீழிறங்கினார். உடனே வாகனம் டீப் பற்றி எரிந்தது.

இதைப் பார்த்து இளைஞரும் உடன் இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அருகே இருந்த ஹோட்டலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.  இந்த வாகனம் வாங்கி 2 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்