சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, தி.நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு மற்றும் அசோக் நகர் என 5 பகுதிகளில் அமைந்துள்ள சில தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை, பில்ரோத் மருத்துவமனை உரிமையாளரின் வீட்டிலும், சாலிகிராமத்தில் வசிக்கும் பாண்டியன் என்பவரின் வீட்டிலும் நடைபெற்று வருகிறது. மேலும், விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அதிகாரியின் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.