குக்கரும் வேண்டும், இரட்டை இலையும் வேண்டும் – அடம்பிடிக்கும் டிடிவி …

வெள்ளி, 18 ஜனவரி 2019 (11:08 IST)
டெல்லி உயர்நீதிமன்றத்தில் குக்கர் சின்னத்தைக் கேட்டு டிடிவி தினகரன் தொடர்ந்துள்ள வழக்கின் முக்கிய விசாரணை இன்று நடைபெற உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்த போது இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவதில் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக வுக்கும் தினகரன் தலைமையிலான அமமுக வுக்கும் இடையில் அதிகாரப் போட்டி நடைபெற்றது. பா.ஜ.க. வின் ஆதரவைப் பெற்றமையால் சின்னம் அதிமுக வுக்கு வழங்கப்பட்டது. இரட்டை சிலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

இரட்டை இலை சின்னத்தை அதிமுக விற்கு ஒதுக்கியது முறைகேடானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் தொடுத்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இதற்கடுத்து ஜெயலலிதாவின் தொகுதியான ஆர் கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று அமோகமாக வெற்றி பெற்றார். அதனால் குக்கர் சின்னத்தையே தங்கள் கட்சியின் நிரந்தர சின்னமாக வழஙக வேண்டுமென உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். ஆனால் குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்குவதற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தினகரன் வழக்கறிஞரிடம் ‘குக்கர் சின்னத்திற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் குக்கர் சின்னத்திற்காக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடுத்துள்ளீர்கள். ஏன் ஏதேனும் ஒரு வழக்கை வாபஸ் பெறக்கூடாது எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.’

இதனால் தினகரன் தரப்புக் குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. எப்படியும் இரட்டை இலை சின்னம் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதனால் இரட்டை சிலை சின்னத்துக்காக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக்த் தெரிகிறது.

இந்த வழக்கு சம்மந்தமாக நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நேரில் ஆஜராகி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியுமா என்பது குறித்து இன்று விளக்கமளிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்