சிறுவன் பலி எதிரொலி- துப்பாக்கி சுடும் பயிற்சிமையம் மூடல்

செவ்வாய், 25 ஜனவரி 2022 (17:42 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீரர்கள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கொண்டு போது எதிர்பாராத வகையில் 10 வயது சிறுவன் புகழேந்தி என்பவர் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சமீபத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழக அரசு சிறுவன் புகழேந்தியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பத்து லட்ச ரூபாயை வழங்கிய அமைச்சர் ரகுபதி தன்னுடைய சார்பில் மேலும் 4 லட்ச ரூபாய் சிறுவனின் குடும்பத்திற்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சிறுவன் பலி எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்