எம்ஜிஆர் சிலையை பெயர்த்த மர்ம ஆசாமிகள்! – தஞ்சாவூரில் பரபரப்பு!

செவ்வாய், 25 ஜனவரி 2022 (09:09 IST)
தஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் சிறிய அளவிலான சிலைகள் முதல் முழு உருவ சிலைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் வடக்குவீதி காளிக்கோவில் பகுதியில் மார்பளவும் எம்ஜிஆர் சிலை ஒன்று நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த சிலையை மர்ம ஆசாமிகள் அடியோடு பெயர்த்து எடுத்து வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்த்துறையினர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததோடு மர்ம ஆசாமிகளையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்