குடிபோதையில் மருத்துவர் சிகிச்சை; ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

புதன், 28 செப்டம்பர் 2022 (14:52 IST)
குடிபோதையில் மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளிப்பதால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிராவ்லி காஸ்பூர் என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டது
 
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் குழந்தை உயிர் இழந்து விட்டது. இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து குடிபோதையில் சிகிச்சை செய்த மருத்துவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்