மதுரை அருகே தடுப்புச் சுவரை மீறிச் சென்று பேருந்தில் மோதிய கார்!

புதன், 28 செப்டம்பர் 2022 (14:15 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தடுப்பை மீறிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர் சிவகாசி சாலையில்  அமைந்துள்ள தனியார் பள்ளி பேருந்து, இன்று காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கள்ளிக்குடியில் இருந்து விருது நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

மையிட்டான்பட்டி விலக்கு என்ற பகுதியில் பள்ளிப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து விருது நகர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது,  ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரை தாண்டி எதிரே வந்த பள்ளிப் பேருந்து மீது மோதியது.

இதில், எதிர்த்திசையில் வந்த காரை அடித்துத் தூக்கி வீசியது. இந்த விபத்தில் கார் டிரைலர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்