கூட்டாட்சி தத்துவத்தை பேணிக்காப்போம்: அண்ணா நினைவு நாளில் கனிமொழி எம்பி டுவிட்!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:33 IST)
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்போம் என திமுக எம்பி கனிமொழி பதிவுசெய்துள்ளார். 
 
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் இன்று அதிமுக திமுக உள்பட திராவிட கட்சியினர் அனுசரித்து வருகின்றனர் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா. மாநில சுயாட்சியின் மையப் புள்ளியும் அவரே. அவரது நினைவு நாளான இன்று நமது உரிமைகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சி தத்துவத்தை பேணி காப்போம் என உறுதி ஏற்போம் என கனிமொழி எம்பி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்