மாண்புமிகு அம்மா என கூறி ஸ்டாலினை கடுப்பேற்றிய திமுக எம்எல்ஏ!

புதன், 5 ஜூலை 2017 (11:25 IST)
கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் ஒரு விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. எடப்பாடி தரப்பில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் கவனிக்கப்படுவதாகவும், திமுக எம்எல்ஏக்கள் சிலர் அதிமுக பாசத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 
 
இந்நிலையில் தமிழக சட்டசபையில் மதுராந்தகம் தொகுதி திமுக எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசும்போது தான் திமுக உறுப்பினர் என்பதை மறந்து மாண்புமிகு அம்மா அவர்களின் என தனது பேச்சை ஆரம்பித்துள்ளார்.
 
திமுக உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தியின் இந்த பேச்சை கேட்ட திமுகவினர் அதிர்ந்துவிட்டனர். அதன் பின்னர் சட்டசபை முடிந்ததும் புகழேந்தியை அழைத்த துரைமுருகன் என்ன நினச்சிட்டு இருக்கீங்க, விட்டா அதிமுக கரை வேட்டிய கட்டிட்டு வந்திடுவிங்க போல என கடுமையாக எச்சரித்துள்ளார்.
 
அதன் பின்னர் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் புகழேந்தியை கண்டித்துள்ளார். எல்லோரும் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க, ஏன் இப்படி பேசுறீங்கன்னு எனக்குத் தெரியும். கட்சித் தலைமைக்கு துரோகம் பண்ணாம, கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோங்க என எச்சரித்துள்ளார் ஸ்டாலின்.

வெப்துனியாவைப் படிக்கவும்