லால்குடி தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எம்.ஜெயசீலனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிருந்தா காரத், “தந்தை பெரியார் இந்த மண்ணிலே இருந்தார் அவரின் மிகச்சிறந்த திராவிட பராம்பரியத்திற்கும், கொள்கைகளுக்கும் துரோகம் செய்த அதிமுக, திமுகவிற்கும் முதன் முறையாக ஒரு படிப்பினையை கொடுக்கப் போகிறார்கள்.
திமுக, அதிமுக தலைவர்களுக்கு எதிராக பல ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே தான் அவர்கள் வாயில் பிளாஸ்திரி போட்டுகொண்டு மோடி அரசுக்கு எதிராக பேச மறுக்கிறார்கள். மோடி அரசிற்கு எதிராக ஒருவார்த்தை பேசக்கூட அவர்களுக்கு தைரியம் கிடையாது.