அமைச்சர் பேர் கூட சரியா தெரியலை, உனக்கெல்லாம் அறிக்கை தேவையா? டுவிட்டரில் வறுபடும் விஜயகாந்த்

வெள்ளி, 26 மே 2017 (22:43 IST)
தேமுதிக பேசினாலே வம்பில் மாட்டிக்கொள்வார் என்பது அனைவரும் அறிந்ததே, இந்த நிலையில் யாரோ எழுதி கொடுத்த அறிக்கையில் கையெழுத்து போட்டு தற்போது மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார் விஜய்காந்த்



 


நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'தனியார் பாலில் கலப்படம் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டை எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விஜயகாந்தும் தனது பங்குக்கு ஒரு கண்டன அறிக்கையை எழுப்பியுள்ளார்.

அந்த கண்டன அறிக்கையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்பதற்கு பதிலாக செந்தில் பாலாஜி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள தவறை சுட்டிக்காட்டி டுவிட்டரில் நெட்டிஸன்கள் விஜயகாந்தை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒருசிலர் அமைச்சர் பேரே தெரியலை, உனக்கெல்லாம் அரசியல், அறிக்கை தேவையா? என்று காரசாரமாக கேட்டு வருகிறார். இதனால் தேமுதிக தலைமை சங்கடத்தில் நெளிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்