அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சனி, 16 டிசம்பர் 2023 (20:05 IST)
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.
 
இந்த  நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் சேலம், தேனி உள்ளிட்ட 13  மாவட்டங்களில்       லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்