தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதை அடுத்து, கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று விழுப்புரத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன் என்பவர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், இன்று அவர் சிகிச்சையின் பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த சூழலில், கொரோனா தொற்றில் இருந்து கர்ப்பிணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. கூட்டம் அதிகமாகும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், உங்கள் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.