அந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிமன்றம் வேலை நிறுத்ததிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால் இதை ஏற்று ஆம்புலன்ஸ் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை கைவிடுவார்களா அல்லது திட்டமிட்டப்படி வேலை நிறுத்தத்தைத் தொடர்வார்களா எனத் தெரியவில்லை. எனவே தீபாவளி அன்று ஆம்புலன்ஸ்கள் இயங்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் பீதியை உண்டாக்கி உள்ளது.