சீமான் வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம்..!

புதன், 20 செப்டம்பர் 2023 (15:48 IST)
சீமான் வழக்கை  11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம்    கேள்வி எழுப்பி உள்ளது
 
நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் வாபஸ் பெறப்பட்ட நிலையில், சீமானுக்கு எதிரான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம்    கேள்வி எழுப்பி உள்ளது மட்டுமின்றி வரும் 26ஆம் தேதி விளக்கமளிக்க 
காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் 2011ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறைக்கு வழங்க சீமான் தரப்பிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
 
விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை காவல்துறை தாக்கல் செய்யவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்