கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான இருவர் தப்பியோட்டம்: குமரியில் பரபரப்பு

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (20:17 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதையும் இன்றும்கூட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் மனதளவிலும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு சிலருக்கு நோய் தடுப்பு மையத்தில் இருந்து தப்பித்து செல்லும் நிகழ்வுகளும் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு வயதானவர்கள் திடீரென தப்பி ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 75 வயது மூதாட்டி மற்றும் 55 வயதான நபர் ஆகிய இருவர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென இருவரையும் காணவில்லை
 
இருவரும் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலால் அவர்களை தேடும் பணியில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் தப்பிச் சென்றால் அவர்களால் மேலும் பலருக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்