மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இது கருத்து சுதந்திரத்திற்கு கீழ் வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மதத்தை அவமதிப்பதுபோல் பேசுவது, கருத்து சுதந்திரம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, இதன் காரணமாக, அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.