அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளா? விரைவில் அறிவிப்பு!

வெள்ளி, 2 ஜூலை 2021 (16:01 IST)
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும், மீண்டும் ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்தும் அதிகப்படியான தளர்வுகள் வழங்குவது குறித்தும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து இன்னும் சில மணி நேரத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
குறிப்பாக கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அந்த மாவட்டங்களுக்கும் அரசு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்