முதலீட்டாளர்கள் எஃப்எம்சிஜி மற்றும் வங்கி பங்குகளிலிருந்து லாபத்தை வெளியேற்றியது முக்கிய காரணமாகும். மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,165.94 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதும் சந்தை மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தியது.
இந்துஸ்தான் யூனிலீவர் அதிகபட்ச சரிவை சந்தித்தது. அல்ட்ராடெக் சிமென்ட், எச்டிஎஃப்சி வங்கி போன்றவையும் சரிந்தன. இருப்பினும், ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற பங்குகள் ஏற்றம் கண்டு முடிவடைந்தன.