இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி கூறியுள்ளார், வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறிய ஜெயலலிதா. மக்கள் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என கூறினார்.
மேலும், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற உழைப்பேன், திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் பொடி பொடியாக்கிவிட்டனர். தமிழக மக்களுக்கு என்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன் என கூறிய ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை என குறிப்பிட்டார்.