தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே ஒரு தெருநாய் கடித்ததில், 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் தினேஷ், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரை ஒரு நாய் கடித்தது. ஆனால், அதை தினேஷும் அவரது குடும்பத்தினரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தினேஷை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.