கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் - மானியத்தை இருமடங்காக அதிகரித்து அரசாணை வெளியீடு!

புதன், 8 டிசம்பர் 2021 (12:17 IST)
15 மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு வழங்கப்படும் இணை மானியம் இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட, மற்றும் வயதானவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் திண்டுக்கல், நாமக்கல், சிவகங்கை, கரூர், திருவள்ளூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் இணை மானியமாக ரூ. ஒரு கோடியே பத்து லட்சம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்