இதை வெச்சு கொரோனாவை சரி பண்ணுங்க..! – உண்டியலை உதயநிதியிடம் கொடுத்த சிறுமி!

செவ்வாய், 1 ஜூன் 2021 (11:45 IST)
தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்கு பலர் நிதியளித்து வரும் நிலையில் சிறுமி தனது உண்டியல் பணத்தை கொடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்ள முதல்வரின் நிவாரண கணக்கிற்கு பலர் நிதியளித்து வருகின்றனர். சமீப காலமாக சிறுவர்கள் பலர் தாங்கள் சைக்கிள், லேப்டாப் வாங்க வைத்திருந்த பணத்தையும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்த தொகையை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினிடம் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்