’நீங்க என்ன மீடியா? பேரு என்ன?’ – அண்ணாமலை பேச்சுக்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்!

புதன், 4 ஜனவரி 2023 (16:09 IST)
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களிடம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசிய விதம் குறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது கேள்வி கேட்ட ஒவ்வொரு நிருபரிடமும் “உங்கள் பெயர் என்ன? நீங்கள் எந்த தொலைக்காட்சி?” என தொடர்ந்து அவர் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் யூட்யூப் செய்தி சேனல்கள் குறித்து அவர் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. முன்னதாக ஒருமுறை பத்திரிக்கையாளர்களை ‘குரங்கு போல தாவுகிறீர்கள்’ என அண்ணாமலை பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசிய விதம் குறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஊடகங்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர் மன்றம், ஊடகங்களுடன் நாகரீகமான உறவை பேண அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்