சென்னை மாலில் மது விருந்து; மயங்கி விழுந்து இறந்த இளைஞர்!

ஞாயிறு, 22 மே 2022 (11:56 IST)
சென்னையில் மால் ஒன்றில் நடந்த மது விருந்தில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள மால் ஒன்றில் நேற்று மது விருந்து நடந்துள்ளது. இசை, நடன நிகழ்ச்சியுடன் நடந்த இந்த விருந்தில் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த மது விருந்தில் சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். அதில் மது அருந்திய அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மது அருந்திய மேலும் பலரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த மது விருந்து அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்