கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!

Mahendran

புதன், 6 ஆகஸ்ட் 2025 (10:31 IST)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அங்கு நடைபெறவிருந்த 'குவான்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர் 2025' செஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில், நேற்று நள்ளிரவு 9-வது மாடியில் மின் கசிவு காரணமாகத் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்தின்போது, விடுதியில் தங்கியிருந்த அனைத்து செஸ் வீரர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற இருந்த இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டங்கள் அனைத்தும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி போட்டியின் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமும் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தால், செஸ் வீரர்கள் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்