நீதிமன்ற அறிவுரையை ஏற்று மெரீனாவில் வாக்கிங் சென்ற கமிஷனர்.

செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:31 IST)
சென்னை மெரீனாவை சுத்தப்படுத்தும் வழக்கின் விசாரணை நேற்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது, சுத்தப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாநகராட்சி கமிஷனரும், காவல்துறை கமிஷனரும் தினசரி மெரீனாவுக்கு வாக்கிங் செல்லலாம் என்று அறிவுறுத்தியது.

நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று இன்று காலை சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் சென்னை மெரீனாவுக்கு வாக்கிங் சென்று, மெரீனா சுத்தப்படுத்தப்படும் பணியையும் மேற்பார்வையிட்டார். அவருடன் சக அதிகாரிகளும் இருந்தனர்.

இதேபோல் மெரீனா சுத்தப்படுத்தும் பணி முடியும்வரை மாநகராட்சி கமிஷனரும், போலீஸ் கமிஷனரும் வாக்கிங் சென்றால் மெரீனா சுத்தப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்படாது என்றும், மெரீனா இன்னும் ஒருசில நாட்களில் பொலிவு பெறும் என்றும் மெரீனாவிற்கு தினந்தோறும் வாக்கிங் வரும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்