பள்ளிகளில் சிசிடிவி கேமரா: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

ஞாயிறு, 13 ஜூன் 2021 (07:44 IST)
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
 
பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கடந்த சில நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது 
 
பெற்றோர்களின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் 
 
மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டால் மாணவிகளுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து வரும் பாலியல் தொல்லை முற்றிலும் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்