நீதிபதி குறித்து விமர்சனம்.. கைதான பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமின்..!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (16:18 IST)
உச்சநீதிமன்ற நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக கைது செய்யப்பட்ட பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. 
 
மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விமர்சித்த வழக்கில் பத்ரி சேஷாத்ரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் குன்னம் உரிமை இயல் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழக்கை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும் பத்ரி சேஷாத்ரி காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பத்ரி சேஷாத்திரிக்கு போலீஸ் கஸ்டடி தேவை இல்லை என்றும் அதற்கான முகாந்திரம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்