திண்டுக்கல் அருகே தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை கைது செய்த போலீசார் கரூர் அழைத்து வந்ததாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கரூர் கூட்டத்திற்கு அவர்தான் ஏற்பாடு செய்திருந்தார் என்றும், திட்டமிடாத அவரது ஏற்பாடு காரணமாகத்தான் இத்தகைய துயர செயல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னரே அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினர் முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.