ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! பெண் வழக்கறிஞர் உள்பட மேலும் 3-பேர் கைது.!!

Senthil Velan

புதன், 17 ஜூலை 2024 (22:21 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் உள்பட மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக  11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
இந்நிலையில் இந்த வழக்கில்  சம்பந்தப்பட்டிருப்பதாக பிரபல ரவுடியின் மனைவியும், அ.தி.மு.க,. திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக துணை செயலாளரும், வழக்கறிஞரும் ஆன, மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
 
போலீசார் விசாரணையில் தி.மு.க, வழக்கறிஞர் அருளுடன் மலர்க்கொடி தொடர்ச்சியாக தொலை பேசியில் பேசியது தெரியவந்துள்ளது.மேலும் அவரது வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்த போலீசார் அதனடிப்படையில் மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

ALSO READ: கன்னடர் பணி ஒதுக்கீடு மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! ஐடி நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு..!!
 
திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துளளனர். இதனையடுத்து இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்