அரவக்குறிச்சி வேட்பாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி அபிஷேகம் செய்த அன்பு மனைவி

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (10:31 IST)
அரவக்குறிச்சி வேட்பாளர் மீது கொதிக்கும் எண்ணெய்யை அவரது மனைவியே ஊற்றியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் வேட்பாளரான போட்டியிடுபவர் ராஜேஷ்குமார் (29). அவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு இடையே இடையே அடிக்கடி தகறாறு ஏற்படுமாம்.
 
இந்த நிலையில்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ரேவதி வீட்டில் பஜ்ஜி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேட்பாளர் ராஜேஷ்குமார் தகறாறு செய்துள்ளார். இதனால், எரிச்சல் அடைந்த அவரது மனைவி ரேவதி, அடுப்பில் வைதிருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து ராஜேஷ்குமார் முகத்தில் ஆத்திரத்தில் வீசியுள்ளார்.
 
இதில், ராஜேஷ்குமார் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, சிகிச்சைகாக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு தீவிர சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
இந்த சம்பவம் குறித்து சின்னதாராபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்