வேறொரு பெண்ணுடன் கள்ளஉறவு ; கணவரின் பிறப்புறுப்பை துண்டித்துக் கொன்ற மனைவி !

செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:10 IST)
மதுரை மாவட்டம் சீட்டாலாட்சி என்ற இடத்தில் வசித்து வரிபவர் ரஞ்சித் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சுபா. இந்த தம்பதியர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ரஞ்சித் குமார் வேறோரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகத் தெரிகிறது. இதுபற்றி தெரிந்த சுபா, கோபத்தில் தனது நண்பர் ஒருவர் உதவியுடன் ரஞ்சித்தை  வெட்டி, அவரது ஆணுறுப்பை துண்டித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
 
வலிதாங்க முடியாமல் ரஞ்சித்குமார் கூச்சல் எழுப்பவே, அருகில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக சுபா மற்றும் அவருக்கு உதவியதாக மூன்று பேரை தேடி வருகின்றனர். இந்தக் கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்