இன்று செங்கல்பட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் பேசிய போது ஒருவரை ஒருவர் புகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்திப் பிடிக்கிறார். பிரதமர் மோடி உலகம் முழுவதும் செல்கிறார். உலகின் முதல் மொழி தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை என்கிறார். தாய்மொழி தெரியாமல் நீ எவ்வளவு வலியைக் கற்றாலும், நீ அறிவு கெட்டவன். தாய்மொழி இயல் கல்வி கற்க வேண்டும்," என்று வலியுறுத்தி, பிரதமரைப் பற்றி புகழ்ந்து பேசினார்.
சீமானை புகழ்ந்த அண்ணாமலையும், பிரதமரைப் புகழ்ந்த சீமானும் பேசியிருப்பதைப் பார்க்கும்போது, இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.