வெக்கமா இல்ல?, கொஞ்சம் கூட மானம், ரோசம், சூடு சொரணை இல்ல?: தமிழிசையை நோக்கி கேட்கும் அமீர்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (18:54 IST)
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்று கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இயக்குனர் அமீர் பாஜக தமிழக தலைவர் தமிழிசையயும், தேசிய கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.


 
 
பேட்டி ஒன்றில் பேசிய தமிழிசை காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசி இரு மாநில மக்களையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இதனை விமர்சித்து பேசிய இயக்குனர் அமீர். ஓட்டு கேட்க மட்டும் நீங்க வருவீங்க, காவிரி பிரச்சனையை தீர்க்க ரஜினி வருணுமா? வெக்கமா இல்ல? கொஞ்சம் கூட மானம், ரோசம், சூடு சொரணை இல்லாம பேசுறிங்க என கூறினார்.
 
மேலும் பேசிய அவர், தேசிய கட்சிகளை கடுமையாக சாடினார். தமிழகத்தின் இந்த பிரச்சணையை தீர்த்து வைக்காத தேசிய கட்சிகள் தமிழகத்துக்கு தேவையில்லை. மாநில கட்சிக்ளே நமக்கு போதும் என்றார். அவரின் முழு பேச்சு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 


நன்றி: நக்கீரன்
அடுத்த கட்டுரையில்