கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்பாட்டம்

வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:38 IST)
நாகப்பட்டினம் மாவட்ட  அதிமுகவினர்  உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும் இன்று கண்டன  ஆர்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அதிமுக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடி  பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமலும்; குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமலும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த விடியா திமுக அரசைக் கண்டித்தும்;

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும்;

குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35,000/- ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது’’என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்