இந்நிலையில், தங்களை கூட்டத்திற்கு அழைக்காமல் புறக்கணித்து வருவதாக ஒருவர் புகார் அளித்தார். புகார் அளித்த நிர்வாகியை மேடைக்கு அழைத்து, செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதாகவும், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, செங்கோட்டையன், புகார் தெரிவித்தவர் அதிமுக உறுப்பினரே இல்லை என்றும், வேண்டுமென்றே பிரச்சனை செய்யும் நோக்கில் கூட்டத்திற்கு வந்ததாகவும் கூறினார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.