நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சதீஷை வழக்கறிஞர்கள் தாக்கினார்களா? அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:44 IST)
நீதிமன்றத்துக்கு சதீஷை அழைத்து வரப்பட்டபோது வழக்கறிஞர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கல்லூரி மாணவி சத்யாவை கல்லூரி மாணவர் சதீஷ்ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சதீஷ் கைது செய்யப்பட்டு இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டார் 
 
அப்போது ஒரு சில வக்கீல்கள் அவரை தாக்க முயற்சி செய்ததாகவும் போலீசார் அவர்களை தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது
 
ஒரு பெண்ணை கொலை செய்து அவரது தந்தையை தற்கொலை செய்ய வைத்தவரை எதற்காக இவ்வளவு பாதுகாப்புடன் அழைத்துச் செல்கிறீர்கள்? கொலைகாரர்களின் முகத்தைக் காட்டுங்கள் என வழக்கறிஞர்கள் ஆவேசமாக கூறியதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்