தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

Siva

ஞாயிறு, 30 ஜூன் 2024 (10:28 IST)
தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்க்யபோது எடப்பாடி பழனிச்சாமி ஒரு நாள் கூட உண்ணாவிரதம் இருந்ததில்லை என நடிகர் கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார் 
 
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவிற்கு படுதோல்வி அடைந்து மண்ணை கவ்விய எடப்பாடி பழனிச்சாமி வெட்கமே இல்லாமல் கள்ளக்குறிச்சி விஷ சாராய பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு உண்ணாவிரதம் இருக்கிறார் என்று கருணாஸ் கூறியுள்ளார் 
 
அதிமுகவின் தொடர் தோல்வியை மூடி மறைக்க எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கபட நாடக வித்தை தான் இது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கியபோது உரிமைகளை மீட்க ஒரு நாள் கூட எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் இருந்ததில்லை என்றும் அவர் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்