ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

J.Durai
சனி, 18 மே 2024 (11:23 IST)
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். 
 
நேற்று அவர் ஓட்டலில் வியாபாரத்தை கவனித்து கொண்டு இருந்தார். 
 
அப்போது உணவருந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர். 
 
அதில் ஒருவர் பாதையை மறைத்தவாறு உட்கார்ந்து உள்ளார். 
 
அவரை ஓரமாக உட்கார சொன்ன போது ராமசாமிக்கும் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
இதில் வாக்குவாதம் முற்றியதில்  ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி ராமசாமி மற்றும் அவரது தந்தையை தாக்கினர். 
 
மேலும் ஓட்டலில் இருந்த டேபிள் பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். 
 
பின்னர் அவர்களை மிரட்டி விட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ராமசாமியை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 
 
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டலை சூறையாடிய 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்